எனதினிய தோழியே .......




உனக்கான 
என் கவிதையில்
உனை வர்ணிக்க
வானவில்லை 
வரச் சொன்னேன்....
அதுவோ,
 தனது நிறங்களின்
எண்ணிக்கை போதாதென
 ஒதுங்கி நிற்கிறதே?
பாசத்திற்கும் பரிவிற்கும்
புது அர்த்தம் தந்த
புது அகராதி நீ..
 அதனால தானோ
புரட்டிப் புரட்டி
 படிக்கிறேன்
உன்னில்
புதைந்திருக்கும்
புது புது அர்த்தங்களையே?

மெதுவாகத்தானே 
காலடி வைத்தாய்
என் இதயத்தில்?
எதிர் பார்க்கவே இல்லை
இப்படி கோட்டை கட்டி குடும்பம் 
      நடத்துவாய் என  !!!!

உன் 
நிழல்  எழுத 
முயல்கையில் 
மீண்டும் மீண்டும் 
இடறி விழுகிறேன் ...
கவனமாய் 
எத்தனை எழுதியும் 
காட்டமுடிவதில்லையே 
கனிவான 
உன் முழு மனதை ...

அன்புக்கடலில் 
நான்
 மூழ்கி எடுத்த முத்தே..
அதனால் தான்
 கோர்க்கிறேனே
  கவிதைகளாய் உனை நானே..


விடியல் எழுந்து
விரியும் வரைக்கும்...
நிலவுன் 
 நினைவுகளை
மெளனமாய் வாசிக்கிறேன்..

                                        - விஷ்ணு 

என்னோடு எப்போதும்.... தொடர் பதிவு



நண்பர்களே ..மன்னிக்கவும் ..
கடந்த சில நாட்களாக வேலை பளு காரணம்
எனது வலை தளங்களில்
எனது பதிவுகள் நினைத்தபடி போடமுடியாமல் போய் விட்டது ..


இதோ எனது வேலைகளை முடித்து வந்துவிட்டேன் உங்களோடு உறவாட ...

எனது தளபதி  Subash அவர்கள்
நல்ல ஒரு தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்திருந்தும்
என்னால் உடன் போட இயலாமல் போய் விட்டது ..
இதோ இந்த பதிவோடு நான் தொடங்குகிறேன்
எனது பயணத்தை ...Subash அவர்கள்
பொறுத்து கொள்வார் என்ற நம்பிக்கையில் ...



என்னோடு எப்போதும் தொடர் பதிவு
*******************************************

ஐயா பெரியோர்களே ..
நான் கணணி உபயோகித்தாலும்
அதிக மென்பொருட்களை பயன் படுத்துவதில்லை .
உள்ளவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் ...

சும்மாவே கும்ம காத்திருக்காங்க ..
இதுலா லேட் ஆ வேற
வந்திருக்கேன் .. எல்லாம்
என்னோடே கஷ்டக்காலம் ..கடவுளே ..

என்கிட்டே இந்த சாப்ட்வேர் 
எதுக்குனெல்லாம் கேட்காதீங்க ..
அப்படி ரொம்ப சந்தேகம் இருந்தா
மக்களே கூகிள் இருக்கு தேடி கண்டுபிடிச்சுக்கோங்க ..
என்ன விட்ருங்க ...எனக்கு இவ்வளவு தான் தெரியும் ..


கடிதமோ இல்லை
கவிதையோ போடற மாதிரியா இது
இந்த மேட்டர் எல்லாம் பெரியவங்க போடற பதிவு ..
நம்ப கிட்ட மாட்டிட்டு ..முழிக்கிது ...

பதிவு மேட்டருக்கு வராம இதென்ன பில்ட் அப் ...
சௌன்ட் வந்திடுச்சு ..
இனியும் நான் மேட்டருக்கு போகலைன்னா ..
இப்பவே கும்ம ஆரம்பிச்சிருவாங்க ..


கீழே நான் சொல்லி இருக்கும் மென் பொருட்களே ..
நான் அதிகம் பயன் படுத்துபவை ...நண்பர்களே ...

3D Creator
Adobe Photoshop CS3
Cool Edit Pro 2.0
Roxio Project Selector
CCleaner
Adobe Reader 8.1
Azhagi - Tamil Word Processor
Paint Shop Pro 7

இவைகளன்றி ..
சாதாரணமா அனைவரும் உபயோகிக்கும்
மென் பொருட்களும் ......
இருக்கு ..அதையும் பயன்படுத்துறேன் ...

அப்பறம் மக்களே
இந்த தொடர் பதிவ எல்லாரும் போட்டு
ஒரு மாதிரி அசந்து போய் இருக்கிற நேரம் ..
நான் புதுசா வலை தள நண்பர்கள்
யாரையும் கொக்கி போடாம எல்லாரையும் மன்னிச்சு விட்டிடுறேன் ...பொழச்சு போங்கோ ...



அன்புடன்
விஷ்ணு

மாட்டிகிட்டேன் ..சினிமாவில் ( தொடர் பதிவு )





அன்பு நண்பர்களே ...

இங்க பாருங்க நம்ப நண்பர்
உருப்புடாதது_அணிமா உருப்புடாதது_அணிமா அவர்கள்
என் மேல ரொம்பவே பாசம் அதிகம் ..
இந்த தொடர் பதிவில் எனக்கும்
ஒரு படம் காட்ட சான்ஸ் குடுத்திருக்கார் ..
ரெம்ப நன்றி நண்பரே ..
இவர் எனது தலைவர் எனவும் இந்த நல்ல நேரத்தில்
சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் ..

( நம்ப கிட்ட பேட்டி எடுக்க வந்திருக்காங்க ..அசத்திருவோம் ..
மேக் அப் ..தம்பி ..அந்த பவ்டறு கொஞ்சம் நல்லா பூசு...
எங்க போட்டோ புடிக்கிரவரு ..நின்னுகிட்டா எடுக்கிறா ???..
நிம்மதியா உட்கார்ந்து எடு ...)

எனவே மக்களே ..என் பேட்டிய படிங்க


அப்ப கேள்விய ..நீங்க கேட்றீங்களா இல்லை நான் கேட்கட்டுமா ?..
ஒ.. நான் பதில் மட்டுமே சொல்லனுமா .....அப்ப கேளுங்க ...



1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?


நான் சினிமா பார்த்ததெல்லாம்
நல்லா நினைவு வந்த பின்னால தாங்க ..
காரணம் இருக்குங்கோ ..அப்பா ரொம்ப கண்டிப்பானவருங்கோ ..
அழுது அடம் பிடிச்சு மொத மொதல்ல பார்த்த படம்னுனா
சிரிக்க கூடாது ..ஸ்கூல்லே இருந்து கூட்டிட்டு போனாங்கங்கோ ..

( ஓய் ..என்ன சும்மா ங்கோ ...நிறுத்திட்டேன் நிறுத்திட்டேன் ...)

பள்ளி குழந்தைகளுக்காகவே தயாரித்த படம் ..
படத்தோட பேரு மறந்திட்டேன் ..விட்டுருங்க ..
கதை ஒரு பள்ளி மாணவனின் கதை என்ற நினைவு ..
அப்போ நான் இரண்டாம் வகுப்பில் படித்த நினைவு ..அதாவது 7 வயசு ..

அந்த வயசுல..எதையும் உணரும் பக்குவம் இல்லை ..
ஆனால்..ரோட்டில ..வரிசையா ..நடந்து போனதும் ..
மஞ்சுளா டீச்சர் குச்சியோடே வந்ததும்..நல்லா நினைவு இருக்கு ..

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கடைசியா ..அரங்கில் பார்த்த படம் என்றால் ..அது குருவி ..
அந்த நேரத்தில் இந்தியாவில் இருந்தேன் ..குவைத்தில் சிவாஜி ..
அப்பறம் எப்பவுமே உட்கார்ந்து தானுங்க படம் பார்ப்பேன் ..

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அரங்கிலன்றி என்று சொன்னால் ..
காக்க காக்க ..ஒரு பாட்டு பாக்கனும்னு நெனச்சி CD போட்டேன்
அப்படியே படம் முழுவதும் பார்த்துவிட்டேன்
( ஹி ஹி .. நம்ப ஜோ )
இங்க நாம நெனைக்கிற மாதிரி எல்லா படமும் ரிலீஸ் ஆகாது ..
CD ..மற்றும் டிவி ...நெட் ..இது தான் நமக்கு ..

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

பெரிசா தாக்கலை ஆனால் பிடித்த படங்களில்
7 -ஜி ரெயின்போ காலனி ...
அந்த கதை கொஞ்சம் வித்யாசமாக
தெரிந்தது எனக்கு என நினைக்கிறேன்

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ஒண்ணுமே இல்லை எனலாம் ...
சில நேர பொழுதுபோக்கு மட்டுமே சினிமா என்னை பொறுத்தவரை

5.ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்

DTS வந்தபோது கொஞ்சம் வியப்பாக இருந்தது ...
காரணம் காட்சிகளின் பிரமிப்புக்கு ஒலியின் முக்கியத்துவம் புரிந்தது

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எப்போதாவது நேரம் கிடைக்கையில்
சாதாரணமாக எனக்கு நண்பர்கள் சொல்வார்கள்
நல்ல படம் ..நல்ல கதை என ..உண்மைதாங்க நம்புங்க ...

7.தமிழ்ச்சினிமா இசை?

இசை ஞானி இளைய ராஜா ...
இசைப்புயல் A .R ரஹ்மான் இருவரின்
இதயத்தை வருடி செல்லும் இதமான மெல்லிசை ...பாடல்கள் ...

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

மலையாள படங்கள் எப்போதாவது பார்ப்பேன் ..
கொஞ்சம் வித்யாசமானவைகள் மட்டும்
மதிலுகள்,. போன்றவை

ஆங்கிலம் பார்ப்பதுண்டு நிறையவே ..
இதில் கொஞ்சம் தாக்கியது என்றால் டைட்டானிடிக் எனலாம் ..

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா?
என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா?
தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?


இப்ப வரை நேரடி தொடர்பில்லை
நானும் ஏதாவது செய்யலாம்னு தான் முயற்சி செய்கிறேன் முடியலை ..
அவார்ட் எல்லாம் கொடுக்கவேண்டி வரும்
அதனால நீங்க நடிக்க வேணாம் அப்பிடிங்கிறாங்க
என்ன செய்ய ..நீங்களே சொல்லுங்க ..
( நாம மேம்படலாம்னா விட மாட்டங்களே நம்பல )

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதோட எதிர்காலத்துக்கு நம்பல ஒண்ணுமே செய்ய விட மாட்டேங்றாங்களே அப்பறம் எப்படி அத பத்தி நெனைக்க ..

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு ஒண்ணுமே ஆகாது ...அது நல்லா தெரியும் ...
தமிழ் மக்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் ..
அடுத்த முக்கிய மந்திரி ..MLA... MP... இவங்களை எல்லாம் கண்டுபிடிக்க
ரொம்பவே கஷ்டப்படுவாங்க ...


ஏதோ என்னையும் மதித்து அழைத்த
உருப்புடாதது_அணிமா அவர்களுக்கு நன்றிகள்..
எனது சொந்த கருத்துக்களை மட்டுமே
சொல்லி இருக்கிறேன் இந்த பதிவில் ..

இதுவும் தொடரோட்டம் போல தான். அதனால் நான் அழைக்கும் சிலர்..

விரல் தூரிகையில்
ஓவியங்கள்
பல படைக்கும்
நண்பர் தமிழ்ப்பறவை


மருத்துவ துறையிலும்
எனது கவிதை துறையிலும்
காவியங்கள் பல படைக்கும்
நண்பர் தங்கராசா ஜீவராஜ்

காவல் துறையிலும்
கவிதை துறையிலும்
அரசனான எனது நண்பர்
மா. கலை அரசன்

நண்பர்களே மறக்காமல் பதிவு இட வேண்டுகிறேன் ...
உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
பாக்கி எல்லாருமே இதே பதிவை போட்டு விட்டதால்
இத்துடன் நிறுத்துகிறேன் ..


அன்புடன்
என்றும் இனிய தோழன்
விஷ்ணு