எனதினிய தோழியே -2

 
உன்னிடம்
பேசும் சில
வார்த்தைகளால் கூட
என் மொழிகள்
கவிதையாகிவிடுகின்றன ..

 
உன்னை
புல்லரிக்கவைக்க
கனவுகளின்  பூக்கூடையோடு
நான் என்றும்   காத்திருப்பேன் ...
நீ கண்ணுறங்க...
 
என்
கற்பனைகளுக்கு
எட்டாததாய்  என்றுமே
உன் கவனிப்புகள்
என்னில் ...
 
இமைகளை  மூடுகிறேன் ..
உறங்கிட அல்ல ..
எனக்கு மட்டும்
எனதான உலகத்தில்
உன்னோடு   கதைகள்
பேசி இருக்க ...
கனவுகளின்   காட்டினில்
கண்மூடி நடக்கிறேன்
கவனமாய்
கைப்பிடித்து செல்ல
கண்மணி உந்தன்
கைகள் இருப்பதால் ...
சிறு துளியாய்
தொடங்கிய
உன் நினைவுகள் 
இன்று சமுத்திரமாய் ...
என்னில்
சல்லாபம் செய்வதை
நீ அறிவாயோ  ?...
 
என் கண்களை
அடகு வைத்து விட்டேன்
உன் கனவு பெட்டகத்தில்...
மீட்டு தர
நேரில் நீ என்று வருவாய்  ? 
வானம் பார்த்து 
வறண்டு கிடந்த பாலைவனத்தில்
அன்பாக பெய்த அடைமழை நீ...
நனைந்து விட்ட உன் நினைவால்
உயிர் கொடுப்பேன்....
ஓராயிரம் கவிப் பூக்களுக்கே....
தனிமைக் கடலில்
நானும் தத்தளிக்கையில்...
உன் நினைவுகளே
என்னை கரை சேர்க்கின்றன....
  
கண்களை மூடுடா...
காத்திருக்கிறேன் கனவுகளில்
  என நீ அழைப்பதால்..
 உறங்கப் போகிறேன்
  உனை உடுத்திக்கொள்ள...

எனதினிய தோழியே .......




உனக்கான 
என் கவிதையில்
உனை வர்ணிக்க
வானவில்லை 
வரச் சொன்னேன்....
அதுவோ,
 தனது நிறங்களின்
எண்ணிக்கை போதாதென
 ஒதுங்கி நிற்கிறதே?
பாசத்திற்கும் பரிவிற்கும்
புது அர்த்தம் தந்த
புது அகராதி நீ..
 அதனால தானோ
புரட்டிப் புரட்டி
 படிக்கிறேன்
உன்னில்
புதைந்திருக்கும்
புது புது அர்த்தங்களையே?

மெதுவாகத்தானே 
காலடி வைத்தாய்
என் இதயத்தில்?
எதிர் பார்க்கவே இல்லை
இப்படி கோட்டை கட்டி குடும்பம் 
      நடத்துவாய் என  !!!!

உன் 
நிழல்  எழுத 
முயல்கையில் 
மீண்டும் மீண்டும் 
இடறி விழுகிறேன் ...
கவனமாய் 
எத்தனை எழுதியும் 
காட்டமுடிவதில்லையே 
கனிவான 
உன் முழு மனதை ...

அன்புக்கடலில் 
நான்
 மூழ்கி எடுத்த முத்தே..
அதனால் தான்
 கோர்க்கிறேனே
  கவிதைகளாய் உனை நானே..


விடியல் எழுந்து
விரியும் வரைக்கும்...
நிலவுன் 
 நினைவுகளை
மெளனமாய் வாசிக்கிறேன்..

                                        - விஷ்ணு 

என்னோடு எப்போதும்.... தொடர் பதிவு



நண்பர்களே ..மன்னிக்கவும் ..
கடந்த சில நாட்களாக வேலை பளு காரணம்
எனது வலை தளங்களில்
எனது பதிவுகள் நினைத்தபடி போடமுடியாமல் போய் விட்டது ..


இதோ எனது வேலைகளை முடித்து வந்துவிட்டேன் உங்களோடு உறவாட ...

எனது தளபதி  Subash அவர்கள்
நல்ல ஒரு தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்திருந்தும்
என்னால் உடன் போட இயலாமல் போய் விட்டது ..
இதோ இந்த பதிவோடு நான் தொடங்குகிறேன்
எனது பயணத்தை ...Subash அவர்கள்
பொறுத்து கொள்வார் என்ற நம்பிக்கையில் ...



என்னோடு எப்போதும் தொடர் பதிவு
*******************************************

ஐயா பெரியோர்களே ..
நான் கணணி உபயோகித்தாலும்
அதிக மென்பொருட்களை பயன் படுத்துவதில்லை .
உள்ளவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் ...

சும்மாவே கும்ம காத்திருக்காங்க ..
இதுலா லேட் ஆ வேற
வந்திருக்கேன் .. எல்லாம்
என்னோடே கஷ்டக்காலம் ..கடவுளே ..

என்கிட்டே இந்த சாப்ட்வேர் 
எதுக்குனெல்லாம் கேட்காதீங்க ..
அப்படி ரொம்ப சந்தேகம் இருந்தா
மக்களே கூகிள் இருக்கு தேடி கண்டுபிடிச்சுக்கோங்க ..
என்ன விட்ருங்க ...எனக்கு இவ்வளவு தான் தெரியும் ..


கடிதமோ இல்லை
கவிதையோ போடற மாதிரியா இது
இந்த மேட்டர் எல்லாம் பெரியவங்க போடற பதிவு ..
நம்ப கிட்ட மாட்டிட்டு ..முழிக்கிது ...

பதிவு மேட்டருக்கு வராம இதென்ன பில்ட் அப் ...
சௌன்ட் வந்திடுச்சு ..
இனியும் நான் மேட்டருக்கு போகலைன்னா ..
இப்பவே கும்ம ஆரம்பிச்சிருவாங்க ..


கீழே நான் சொல்லி இருக்கும் மென் பொருட்களே ..
நான் அதிகம் பயன் படுத்துபவை ...நண்பர்களே ...

3D Creator
Adobe Photoshop CS3
Cool Edit Pro 2.0
Roxio Project Selector
CCleaner
Adobe Reader 8.1
Azhagi - Tamil Word Processor
Paint Shop Pro 7

இவைகளன்றி ..
சாதாரணமா அனைவரும் உபயோகிக்கும்
மென் பொருட்களும் ......
இருக்கு ..அதையும் பயன்படுத்துறேன் ...

அப்பறம் மக்களே
இந்த தொடர் பதிவ எல்லாரும் போட்டு
ஒரு மாதிரி அசந்து போய் இருக்கிற நேரம் ..
நான் புதுசா வலை தள நண்பர்கள்
யாரையும் கொக்கி போடாம எல்லாரையும் மன்னிச்சு விட்டிடுறேன் ...பொழச்சு போங்கோ ...



அன்புடன்
விஷ்ணு