Showing posts with label உன்னைத் தேடி ...கடிதம் கவிதை .. இனிய தோழி .By... .விஷ்ணு. Show all posts
Showing posts with label உன்னைத் தேடி ...கடிதம் கவிதை .. இனிய தோழி .By... .விஷ்ணு. Show all posts

உன்னைத் தேடி ...

முந்தைய கடிதங்களை
படிக்காமல் இதை படித்தால்
ஒருவேளை புரிவது கடினமாகலாம் ..
முதல் கடிதம் முதல் வரலாமே ...

கடிதம் : 1
கடிதம் : 2
கடிதம் : 3
கடிதம் : 4




கடிதம் 5
**********


இனிய நண்பர்களே
நீண்ட நாட்களாக கடிதம் போட இயலவில்லை ..

பொருத்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன் ..

இதற்கிடையில் நடந்த
சில விசயங்களை
உங்களிடம் சொல்லி விட வேண்டும் ..

அந்த தோழி அவளது கைபேசி எண்ணுடன்

எனக்கு பதில் அனுப்பி இருந்தாள்
என்று சொல்லி இருந்தேன்...
தானே

அடுத்து மனதில் ஆசை

அவள் எப்படி இருப்பாள் என தெரிந்துகொள்ள ..

எனவே எனது நண்பனின் எண்ணப்படி

வலைத்தளங்களில்  தேடி பாரடா என்று சொல்ல ..

வேகம் ஓடினேன்  ..


எனக்கு அந்த தோழியின்
உண்மை பெயர் கூட தெரியாது தானே ..

எனவே முதல் வேலையாக
அவள் கவிதைகளை வைத்து தேடினேன் ..

அதில் சிக்கியது அவளது ஒரு கவிதை ..
 
கவிதைகள் Community இல் ..
அதை வைத்து
அதை எழுதியவர் Profile சென்றேன் ..


மிக அதிக நண்பர்களுடன் ஒரு தோழி ..

சோகமாய் சிரித்துக்கொண்டு ..

சொந்த புகைப்படத்துடன் ...

எனவே அவள் அறிமுகம் கிடைக்க

அந்த தோழி இவள் தானா ..என உறுதி செய்ய

எனது ஒரு கவிதையை

அவளது
Testimonial க்கு அனுப்பி வைத்தேன் ..
இனி நான் இது பற்றி
எனது தோழிக்கு எழுதிய கடிதத்தை படியுங்கள் ...


கடிதம்
********
எனதினிய தோழியே நலமா ?..

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு
மீண்டும் கடிதம் எழுத வேண்டும் என நினைத்தேன்
இதோ தொடங்கி விட்டேன் ...

இரண்டு நாட்களுக்கு முன்
ஒரு SMS அனுப்பி இருந்தேன்
கண்டுகொண்டமாதிரியே தெரியவில்லை ..
வலை தளத்தில்  ஒரு தோழியை அறிமுகம் ஆனேன்


வாழ்க்கையில்
அடிபட்டவளா தெரியவில்லை ..

அப்படி ஒரு சோகம் முகத்தில் முத்தாராமாய் ..
ஆனால் அதிலும் சிரிக்கிறாள்
ஜீரணிக்க முடியாத சிரிப்பு
அவள் முகத்தில் ....

எனவே எனது கவிதை ஒன்றை
Testimonial ஆக
அவளுக்கு அனுப்பி வைத்தேன்
அதை அவள் முழு மனதாக இணைத்துகொண்டாள்
தனது Testimonial லில் ...
என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை
நன்றி சொல்லவும் இல்லை ..


உனக்கும் அவளுக்கும்
ஓராயிரம் ஒற்றுமைகள் ...
உண்மை சொல்வாயா ??
நீயா அது ???
உன்னை தேடி தேடி
நான் அவளில் போய் நிற்கிறேன்
எனக்கு எதுவும் புரியவில்லை ..??

சீக்கிரம் மெண்டல் ஆகி விடுவேன் என்று நினைக்கிறேன் ..


நான் அந்த தோழிக்கு எழுதிய கவிதை
இங்கு இணைக்கிறேன் உனது பார்வைக்கு ..
அவள் புகைப்படத்தில்
அவள் சிரிப்பை பார்த்த போது தோன்றிய கவிதை ..

சோகம்
*********



உன்
மனதின்
வீணையை
மீட்டியது யாரோ ?
பிறக்கின்ற
ராகங்கள் எல்லாம்
சோகத்தின் சந்தங்களோ !!!....

இனிய
பௌர்ணமி ஒளி கூட
சுட்டெரிக்கும் சூரினாக
சுடுகிறதோ உன்னை !!!....

உன் ஆசை எல்லாம்
சிறக்கொடிந்த பறவையாய்,....
நீயோ ,........
மனவானில் நிறைந்திருந்த
அழகான வானவில்லை
அழிக்கும் கண்ணீர் மேகமாய் ,.....

பாதி மறைந்த பனியும்
சிறு தூரல் மழையும்
அணைத்து கொண்ட
இந்த இரவில்
யாரை காத்து நிற்கிறாய்
நீ மட்டும் தனியே,.....
காற்றில் அலைபாயும்
தீப ஒளியாய் ?,.......
- விஷ்ணு



நீ அவள் தானா என்பதை
வேகமாய் சொல்லமாட்டாய்
என்று தெரிந்தும்
உனது பதிலை
எதிர்நோக்கி

உனதினிய தோழன்
விஷ்ணு ..


நண்பர்களே ..படித்து விட்டீர்களா ...
இந்த தோழியை தேட

அறிமுகமான புதிய தோழியின்
அந்த சோகமான சிரிப்புள்ள புகைப்படத்தை

மாற்ற வேண்டும் என நான் விண்ணப்பம் வைத்ததும்

அதை அவள் மாற்றியதும் வேறு கதை ..

அதையும் அந்த சிரிப்பை மாற்ற
நான் அவளுக்கு அனுப்பிய கடிதத்தையும்
இணைக்கிறேன் விரைவில் ..


அன்புடன்

விஷ்ணு