உன்னைத் தேடி ...

முந்தைய கடிதங்களை
படிக்காமல் இதை படித்தால்
ஒருவேளை புரிவது கடினமாகலாம் ..
முதல் கடிதம் முதல் வரலாமே ...

கடிதம் : 1
கடிதம் : 2
கடிதம் : 3
கடிதம் : 4




கடிதம் 5
**********


இனிய நண்பர்களே
நீண்ட நாட்களாக கடிதம் போட இயலவில்லை ..

பொருத்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன் ..

இதற்கிடையில் நடந்த
சில விசயங்களை
உங்களிடம் சொல்லி விட வேண்டும் ..

அந்த தோழி அவளது கைபேசி எண்ணுடன்

எனக்கு பதில் அனுப்பி இருந்தாள்
என்று சொல்லி இருந்தேன்...
தானே

அடுத்து மனதில் ஆசை

அவள் எப்படி இருப்பாள் என தெரிந்துகொள்ள ..

எனவே எனது நண்பனின் எண்ணப்படி

வலைத்தளங்களில்  தேடி பாரடா என்று சொல்ல ..

வேகம் ஓடினேன்  ..


எனக்கு அந்த தோழியின்
உண்மை பெயர் கூட தெரியாது தானே ..

எனவே முதல் வேலையாக
அவள் கவிதைகளை வைத்து தேடினேன் ..

அதில் சிக்கியது அவளது ஒரு கவிதை ..
 
கவிதைகள் Community இல் ..
அதை வைத்து
அதை எழுதியவர் Profile சென்றேன் ..


மிக அதிக நண்பர்களுடன் ஒரு தோழி ..

சோகமாய் சிரித்துக்கொண்டு ..

சொந்த புகைப்படத்துடன் ...

எனவே அவள் அறிமுகம் கிடைக்க

அந்த தோழி இவள் தானா ..என உறுதி செய்ய

எனது ஒரு கவிதையை

அவளது
Testimonial க்கு அனுப்பி வைத்தேன் ..
இனி நான் இது பற்றி
எனது தோழிக்கு எழுதிய கடிதத்தை படியுங்கள் ...


கடிதம்
********
எனதினிய தோழியே நலமா ?..

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு
மீண்டும் கடிதம் எழுத வேண்டும் என நினைத்தேன்
இதோ தொடங்கி விட்டேன் ...

இரண்டு நாட்களுக்கு முன்
ஒரு SMS அனுப்பி இருந்தேன்
கண்டுகொண்டமாதிரியே தெரியவில்லை ..
வலை தளத்தில்  ஒரு தோழியை அறிமுகம் ஆனேன்


வாழ்க்கையில்
அடிபட்டவளா தெரியவில்லை ..

அப்படி ஒரு சோகம் முகத்தில் முத்தாராமாய் ..
ஆனால் அதிலும் சிரிக்கிறாள்
ஜீரணிக்க முடியாத சிரிப்பு
அவள் முகத்தில் ....

எனவே எனது கவிதை ஒன்றை
Testimonial ஆக
அவளுக்கு அனுப்பி வைத்தேன்
அதை அவள் முழு மனதாக இணைத்துகொண்டாள்
தனது Testimonial லில் ...
என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை
நன்றி சொல்லவும் இல்லை ..


உனக்கும் அவளுக்கும்
ஓராயிரம் ஒற்றுமைகள் ...
உண்மை சொல்வாயா ??
நீயா அது ???
உன்னை தேடி தேடி
நான் அவளில் போய் நிற்கிறேன்
எனக்கு எதுவும் புரியவில்லை ..??

சீக்கிரம் மெண்டல் ஆகி விடுவேன் என்று நினைக்கிறேன் ..


நான் அந்த தோழிக்கு எழுதிய கவிதை
இங்கு இணைக்கிறேன் உனது பார்வைக்கு ..
அவள் புகைப்படத்தில்
அவள் சிரிப்பை பார்த்த போது தோன்றிய கவிதை ..

சோகம்
*********



உன்
மனதின்
வீணையை
மீட்டியது யாரோ ?
பிறக்கின்ற
ராகங்கள் எல்லாம்
சோகத்தின் சந்தங்களோ !!!....

இனிய
பௌர்ணமி ஒளி கூட
சுட்டெரிக்கும் சூரினாக
சுடுகிறதோ உன்னை !!!....

உன் ஆசை எல்லாம்
சிறக்கொடிந்த பறவையாய்,....
நீயோ ,........
மனவானில் நிறைந்திருந்த
அழகான வானவில்லை
அழிக்கும் கண்ணீர் மேகமாய் ,.....

பாதி மறைந்த பனியும்
சிறு தூரல் மழையும்
அணைத்து கொண்ட
இந்த இரவில்
யாரை காத்து நிற்கிறாய்
நீ மட்டும் தனியே,.....
காற்றில் அலைபாயும்
தீப ஒளியாய் ?,.......
- விஷ்ணு



நீ அவள் தானா என்பதை
வேகமாய் சொல்லமாட்டாய்
என்று தெரிந்தும்
உனது பதிலை
எதிர்நோக்கி

உனதினிய தோழன்
விஷ்ணு ..


நண்பர்களே ..படித்து விட்டீர்களா ...
இந்த தோழியை தேட

அறிமுகமான புதிய தோழியின்
அந்த சோகமான சிரிப்புள்ள புகைப்படத்தை

மாற்ற வேண்டும் என நான் விண்ணப்பம் வைத்ததும்

அதை அவள் மாற்றியதும் வேறு கதை ..

அதையும் அந்த சிரிப்பை மாற்ற
நான் அவளுக்கு அனுப்பிய கடிதத்தையும்
இணைக்கிறேன் விரைவில் ..


அன்புடன்

விஷ்ணு





எனதினிய தோழியே -2

 
உன்னிடம்
பேசும் சில
வார்த்தைகளால் கூட
என் மொழிகள்
கவிதையாகிவிடுகின்றன ..

 
உன்னை
புல்லரிக்கவைக்க
கனவுகளின்  பூக்கூடையோடு
நான் என்றும்   காத்திருப்பேன் ...
நீ கண்ணுறங்க...
 
என்
கற்பனைகளுக்கு
எட்டாததாய்  என்றுமே
உன் கவனிப்புகள்
என்னில் ...
 
இமைகளை  மூடுகிறேன் ..
உறங்கிட அல்ல ..
எனக்கு மட்டும்
எனதான உலகத்தில்
உன்னோடு   கதைகள்
பேசி இருக்க ...
கனவுகளின்   காட்டினில்
கண்மூடி நடக்கிறேன்
கவனமாய்
கைப்பிடித்து செல்ல
கண்மணி உந்தன்
கைகள் இருப்பதால் ...
சிறு துளியாய்
தொடங்கிய
உன் நினைவுகள் 
இன்று சமுத்திரமாய் ...
என்னில்
சல்லாபம் செய்வதை
நீ அறிவாயோ  ?...
 
என் கண்களை
அடகு வைத்து விட்டேன்
உன் கனவு பெட்டகத்தில்...
மீட்டு தர
நேரில் நீ என்று வருவாய்  ? 
வானம் பார்த்து 
வறண்டு கிடந்த பாலைவனத்தில்
அன்பாக பெய்த அடைமழை நீ...
நனைந்து விட்ட உன் நினைவால்
உயிர் கொடுப்பேன்....
ஓராயிரம் கவிப் பூக்களுக்கே....
தனிமைக் கடலில்
நானும் தத்தளிக்கையில்...
உன் நினைவுகளே
என்னை கரை சேர்க்கின்றன....
  
கண்களை மூடுடா...
காத்திருக்கிறேன் கனவுகளில்
  என நீ அழைப்பதால்..
 உறங்கப் போகிறேன்
  உனை உடுத்திக்கொள்ள...

எனதினிய தோழியே .......




உனக்கான 
என் கவிதையில்
உனை வர்ணிக்க
வானவில்லை 
வரச் சொன்னேன்....
அதுவோ,
 தனது நிறங்களின்
எண்ணிக்கை போதாதென
 ஒதுங்கி நிற்கிறதே?
பாசத்திற்கும் பரிவிற்கும்
புது அர்த்தம் தந்த
புது அகராதி நீ..
 அதனால தானோ
புரட்டிப் புரட்டி
 படிக்கிறேன்
உன்னில்
புதைந்திருக்கும்
புது புது அர்த்தங்களையே?

மெதுவாகத்தானே 
காலடி வைத்தாய்
என் இதயத்தில்?
எதிர் பார்க்கவே இல்லை
இப்படி கோட்டை கட்டி குடும்பம் 
      நடத்துவாய் என  !!!!

உன் 
நிழல்  எழுத 
முயல்கையில் 
மீண்டும் மீண்டும் 
இடறி விழுகிறேன் ...
கவனமாய் 
எத்தனை எழுதியும் 
காட்டமுடிவதில்லையே 
கனிவான 
உன் முழு மனதை ...

அன்புக்கடலில் 
நான்
 மூழ்கி எடுத்த முத்தே..
அதனால் தான்
 கோர்க்கிறேனே
  கவிதைகளாய் உனை நானே..


விடியல் எழுந்து
விரியும் வரைக்கும்...
நிலவுன் 
 நினைவுகளை
மெளனமாய் வாசிக்கிறேன்..

                                        - விஷ்ணு