எனதினிய தோழியே .......




உனக்கான 
என் கவிதையில்
உனை வர்ணிக்க
வானவில்லை 
வரச் சொன்னேன்....
அதுவோ,
 தனது நிறங்களின்
எண்ணிக்கை போதாதென
 ஒதுங்கி நிற்கிறதே?
பாசத்திற்கும் பரிவிற்கும்
புது அர்த்தம் தந்த
புது அகராதி நீ..
 அதனால தானோ
புரட்டிப் புரட்டி
 படிக்கிறேன்
உன்னில்
புதைந்திருக்கும்
புது புது அர்த்தங்களையே?

மெதுவாகத்தானே 
காலடி வைத்தாய்
என் இதயத்தில்?
எதிர் பார்க்கவே இல்லை
இப்படி கோட்டை கட்டி குடும்பம் 
      நடத்துவாய் என  !!!!

உன் 
நிழல்  எழுத 
முயல்கையில் 
மீண்டும் மீண்டும் 
இடறி விழுகிறேன் ...
கவனமாய் 
எத்தனை எழுதியும் 
காட்டமுடிவதில்லையே 
கனிவான 
உன் முழு மனதை ...

அன்புக்கடலில் 
நான்
 மூழ்கி எடுத்த முத்தே..
அதனால் தான்
 கோர்க்கிறேனே
  கவிதைகளாய் உனை நானே..


விடியல் எழுந்து
விரியும் வரைக்கும்...
நிலவுன் 
 நினைவுகளை
மெளனமாய் வாசிக்கிறேன்..

                                        - விஷ்ணு