தொண்டு கட்டை ...




அன்புள்ள நண்பர்களே ...


எனது முதல் கடிதத்தில்
நான் சொல்லி இருந்தேன் ...
பெண்களுக்கு கடிதம் எழுதுவதில்லை
காரணம் சொல்கிறேன் என ..

நான் படித்தது ..
ஒரு சிறு கிராமத்தில் ...
ஒரு சிறிய பள்ளியில் ...

எனது தொடக்க கல்வி
அப்படி தான் ..தொடங்கியது ...
நினைத்தால் இப்பவும் சிரிப்பு வரும் ..
அந்த பள்ளி ஒரு தனியார் பள்ளி ..
அங்கு ஆசிரியர்களாக ஒரே குடும்பத்தை சேர்த்தவர்கள் ...
அங்கு நானும் எனது நண்பர்களும்
செய்யாத குறும்புகளே இல்லை எனலாம் ...

அப்பள்ளியில் ஒரு வரவேற்பறை ...
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது ...
அந்த வரவேற்பறையில்....
நீங்கள்.. கேள்வி பட்டிருப்பீர்களா என தெரியவில்லை ...

தொண்டு கட்டை ...
இப்படித்தான் அழைப்போம் அதனை ..
ஒரு மூலையில் அடுக்கிவைக்க பட்டிருக்கும் ..
அந்த பள்ளியில் நான்
நான்காம் வகுப்பு வரை படித்தேன் ..

ஒரு கட்டையில் ..
சாதாரணமாக அம்மி கல்லில் உள்ள அம்மி போல
ஒரு உருண்ட கட்டை.. அதில் ஒரு சங்கிலியும்
அதனோடு சேர்த்து ஒரு வளையம் பூட்டு...
இத்தியாதி ..சாதனங்கள் சேர்ந்தது தான் தொண்டு கட்டை ...

அந்த தொண்டு கட்டை எதற்கு தெரியுமா ?...
மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களை பயப்படுத்தவும்
நான்காம் வகுப்பு முதல்
தேவை என்றால் (குறும்பு அதிகமானால்)
அதை காலில் மாட்டி ..பூட்டி விடுவார்கள் ..

எங்கு வெளியில் சென்றாலும்
அந்த கட்டையை கையில் எடுத்துக்கொண்டு தான்
செல்ல வேண்டும் ..
வெளியில் நடக்கும்போது
எல்லா பசங்களும் கிண்டலும் செய்வார்கள்
தொண்டு கட்டை என ..கூவி ...

கட்டை மாட்டிக்கொண்டு
வீட்டுக்கு போனால் அங்கும் அடி ...
ரெம்ப கொடுமையான தண்டனை அது .
வீதி முழுவதும் தூக்கிக்கொண்டு ...
உறங்கும்போதும் கூடவே ...
நினைக்கவே பயமாக இருக்கு ..
இதில் சக மாணவர்களின் கிண்டல் ..
கட்டை போட காரணம் ..
வீதிகள் வருவோர் போவோர் எல்லாம் கேட்பார்கள் ..
பதில் சொல்ல வேண்டும் ..
அதும் உறவினர்கள் என்றால்
அவர்கள் பங்குக்கு
காரணம் தெரிந்த பின்
வீதியிலேயே ...ரெண்டு அடி தருவார்கள் ...

இது இந்த பள்ளியில் அதிக பட்ச தண்டனை ...
எத்தனை நாட்களுக்கு இப்படி நடக்கவேண்டும்
என்பதை தலைமை ஆசிரியர் தான் தீர்மானிப்பார்..

இனி விசயத்திற்கு வருகிறேன் ...
நான் நான்காம் வகுப்பு படித்தபோது ..
எனது நெருங்கிய தோழர்கள்
ஆறுமுகம் , மயில்சாமி , அர்ஜுனன், குமார் ..

இதில் ஆறுமுகம் கொஞ்சம் குறும்பு அதிகம் ..
அப்பவே அதிக சினிமா பார்த்தவன் எங்களில் ..
அன்று வழக்கம்போல் காலையில்
நாங்கள் அனைவரும் பள்ளியில் ஆஜர்,..
அப்போது வகுப்பில்
மஞ்சுளா டீச்சர் ..

ரெம்ப நல்லவங்க ...
நல்லா பாடம் எல்லாம் சொல்லி தருவாங்க ...
பிரேயர் முடிந்து வகுப்பு தொடங்கி விட்டது ...
ஆறுமுகம் மும்முரமாக
ஏதோ எழுதிக்கொண்டு இருந்தான் ..
அதும் மீண்டும் மீண்டும் திருத்தி...
பாடத்தில் கவனமாக இருந்ததால்
அவன் என்ன எழுதுகிறான் என்று
நான் கவனிக்கவில்லை ..
காரணம் எனக்கு பிடித்த பாடம் ....

கொஞ்ச நேரத்தில் ..
இண்டெர்வல் விட்டார்கள்..
சரி என நாங்கள் மூன்று பேர் வெளியில் போனோம் ..
ஆறுவை காணவில்லை ...
எங்கே போனான் என தேடியும் கிடைக்கவில்லை ..

பள்ளியில் கழிவறை எல்லாம் கிடையாது ..
கொஞ்சம் தள்ளி ஒரு சின்ன மைதானம் வரை
நடந்து போக வேண்டும் ..
எல்லாம் முடிந்து திரும்பி வந்தால் ..
அங்கு வகுப்பில் ஒரே களோபரம் ...

ஆறுவை தலைமை ஆசிரியர்
அடித்துக்கொண்டு இருந்தார் ..
பக்கத்தில் போக பயம்...
வேறு வழி இல்லாமல் பக்கத்தில் போனபோது
எங்களுக்கும் கொஞ்சம் அடி கிடைத்தது ...

விஷயம் தெரியாமல் அடி வாங்கினேன் ...
தொண்டு கட்டை எடுக்கப்பட்டது ..
அன்று ஆறுமுகம் அழுதது
இன்றும் எனக்கு மிக நன்றாக நினைவு இருக்கிறது ...

பாவம் அவன் ...
வகுப்பில் ராஜி என ஒரு வகுப்பு தோழி
அவளுக்கு கடிதம் கொடுத்திருக்கிறான் ..
கடிதம் என்றால்..
சின்ன துண்டு பேப்பருலே
உன்னை பிடிச்சிருக்கு
என்று எழுதி கொடுத்திருக்கிறான் ...
அதை அவள்
மஞ்சுளா டீச்சருக்கு கை மாற
விஷயம் தலைமை ஆசிரியர் வரை போய்
தொண்டு கட்டை போடும் நிலைமைக்கு வந்து விட்டது ...

மூன்று நாட்கள் ரெம்ப கஷ்டப்பட்டான் ..
சில நேரம் நானும் மயிலும்( மயில் சாமி)
மாறி மாறி கட்டையை தூக்கி கொள்வோம்
அவன் பக்கத்தில் நடந்து வருவான்

ஆனால் அவன் ரெம்ப நல்லவன் ..
இதில் ..அவன் ஒரு உண்மையை மறைத்து
என்னை காப்பாற்றி விட்டான் ...
காரணம் ..லெட்டர் கொடு என
ஐடியா கொடுத்ததே நான் தான் ...
அவன் மட்டும் அன்று
நான் தான் லெட்டர் கொடுக்க சொன்னேன் என
சொல்லி இருந்தால்....
அன்று எனக்கும் தொண்டு கட்டை தான் ...

இந்த நிகழ்ச்சி மாறாத வடு போல
மனதில் பதிந்து விட்டது ..
நான் பள்ளிகள் பல மாறியும் ..
கல்லூரி படிப்பிலும்
கடிதம் கொடுக்கும் எண்ணம்
என் மனதில் உதிக்கவே இல்லை
என்பது தான் உண்மை ..
இவ்வளவு மனதில் உறுதியாக இருந்தேன்..

வருடங்கள்..பல கடந்து ..
வேலை பார்க்க தொடங்கி
கடந்த வருடம் தான்
நான் முதல் முதலாக
நான் சொன்னேனே ...
அந்த தோழிக்கு கடிதம் எழுதினேன் ..
அது நீங்கள் முன் படித்தீர்கள் தானே ..

நேரம் கிடைக்கையில் நாங்கள் அனைவரும் சேர்ந்து
ராஜியை பலிவாங்கிய நிகழ்வை சொல்கிறேன் ...
அடுத்த கடிதமும் எழுதவேண்டும்

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே ..

அன்புடன்
விஷ்ணு ...