எனதினிய தோழியே -2

 
உன்னிடம்
பேசும் சில
வார்த்தைகளால் கூட
என் மொழிகள்
கவிதையாகிவிடுகின்றன ..

 
உன்னை
புல்லரிக்கவைக்க
கனவுகளின்  பூக்கூடையோடு
நான் என்றும்   காத்திருப்பேன் ...
நீ கண்ணுறங்க...
 
என்
கற்பனைகளுக்கு
எட்டாததாய்  என்றுமே
உன் கவனிப்புகள்
என்னில் ...
 
இமைகளை  மூடுகிறேன் ..
உறங்கிட அல்ல ..
எனக்கு மட்டும்
எனதான உலகத்தில்
உன்னோடு   கதைகள்
பேசி இருக்க ...
கனவுகளின்   காட்டினில்
கண்மூடி நடக்கிறேன்
கவனமாய்
கைப்பிடித்து செல்ல
கண்மணி உந்தன்
கைகள் இருப்பதால் ...
சிறு துளியாய்
தொடங்கிய
உன் நினைவுகள் 
இன்று சமுத்திரமாய் ...
என்னில்
சல்லாபம் செய்வதை
நீ அறிவாயோ  ?...
 
என் கண்களை
அடகு வைத்து விட்டேன்
உன் கனவு பெட்டகத்தில்...
மீட்டு தர
நேரில் நீ என்று வருவாய்  ? 
வானம் பார்த்து 
வறண்டு கிடந்த பாலைவனத்தில்
அன்பாக பெய்த அடைமழை நீ...
நனைந்து விட்ட உன் நினைவால்
உயிர் கொடுப்பேன்....
ஓராயிரம் கவிப் பூக்களுக்கே....
தனிமைக் கடலில்
நானும் தத்தளிக்கையில்...
உன் நினைவுகளே
என்னை கரை சேர்க்கின்றன....
  
கண்களை மூடுடா...
காத்திருக்கிறேன் கனவுகளில்
  என நீ அழைப்பதால்..
 உறங்கப் போகிறேன்
  உனை உடுத்திக்கொள்ள...