நழுவிய அழைப்பு ...


நழுவிய அழைப்பு ...( Missed Call )

இனிய நண்பர்களே ...
வணக்கம் ...
மீண்டும் ..
எனது அடுத்த கடிதம்
உங்கள் விழிகள் தழுவ ...

கடந்த எனது கடிதத்தில்
எனது கைபேசி எண்ணை
அந்த தோழிக்கு கொடுத்திருந்தேன்
என்று தெரியும் தானே உங்களுக்கு ..

திடீர் என்று ஒரு வெள்ளிக்கிழமை
காலையில் எனது கைபேசி சிணுங்க
அந்த அழைப்பை
நான் தழுவும் முன் அது நழுவி விட்டது ( Missed)
எனக்கோ மிக ஆச்சரியமாக போய் விட்டது ..
மண்டையை உடைத்துகொள்ளாதது தான் பாக்கி..
காரணம் இருக்குங்கோ ...
வெளி நாடுகளில் இருந்து
கைபேசிக்கு அழைப்பு வந்தால்
குவைத்தில் அழைப்பவர் எண் தெரியாது ....
கைபேசியில் இருந்து அழைத்தாலும் ..
இதே கதி தான்
பைத்தியம் பிடிக்கிற மாதிரி .. 00 110 ..இந்த மாதிரி ..
ஏதாவது புரியாத எண்கள் வரும்
அதே எண்ணுக்கு நாம் அழைத்தாலும்
தொடர்பு கிடைக்காது ...

நீங்களே சொல்லுங்க ..
எனக்கு பைத்தியம் பிடிக்காம இருக்குமா ?..
எனக்கு யாருமே நழுவும் அழைப்பை (Miss call)
பண்ண மாட்டாங்க ..
செய்ய கூடாதுன்னு சொல்லியே வச்சிருக்கேன் ..
அப்படி இருக்க ..எப்படிங்க ?..
நான் எண் கைபேசி எண்ணை
யாருக்குமே கொடுப்பது கிடையாது ..
இவங்களுக்கு தான் சமீபத்தில் கொடுத்திருக்கிறேன் ..
அதாங்க ஒரு மடல் போட காரணம் ..
( ஏன்டா உனக்கு லெட்டர் போட வேற விசயமே கிடைக்கலையானு நீங்க திட்டக்கூடாது ..நான் என்ன செய்ய )
முடிவு பண்ணிட்டேன் ....
அவங்களுக்கு ஒரு மடல் போடலாம் என ...
அதாங்க இந்த லெட்டர் ..
படிச்சிட்டு வாங்க
காத்திருக்கிறேன் ..


என்
இனிய தோழிக்கு
நலம் ..நலமா ?..
என்ன செய்து கொண்டு இருக்கிறாய் ?..
உன் பதில் வரும் என்ற உறுதியில்
இதோ இன்றும் தொடங்கிவிட்டேன்
உனக்கு மடல் எழுதவே ...

வீட்டில் அனைவரையும் கேட்டதாக கூறவும்...
யார் யார் வீட்டில் என நீ விரிவாக எழுதிய மடல் கிடைத்தது ..
( மடல் வந்துச்சு ஆனா... வீட்ல யாரு யாரு இருக்காங்க ...அப்படின்னு எதுவும் அதுல இல்லை ..அத எப்படி அவங்க கிட்ட சொல்லறதுன்னு தெரியல .)

இப்பவும் photo gallery ...cine gallery என
வழக்கம்போல்
செய்ததையே செய்து கொண்டு
இருப்பாய் என நினைக்கிறேன் என்னைப்போல ...
என்ன புரியவில்லையா ?..
உனக்கு மறக்காமல்
தினம் ஒரு கடிதம் என எழுதுகிறேனே ..அது போல ..
எனது வேலை நன்றாகவே நடக்கிறது ...

உன்னிடம் முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும்
தயவு செய்து கடந்த வெள்ளி அன்று செய்தது போல
நழுவும் அழைப்பை எனது கைபேசிக்கு ( Mobile) செய்யாதே ..

காரணம் இங்கு குவைத்தில்...
எங்கிருந்து கால் வந்தாலும்
இன்காமிங் நம்பர் தெரியாது ..
குவைத்தில் எல்லா
தொலைபேசி சேவைகளும் ( நெட்வொர்க்)
அப்படி தான் ..

வெள்ளியன்று உனது அழைப்பு என ..
தெரியாமல்....
நீ தான் ..
ஏனென்றால் எனக்கு
நழுவும் அழைப்பு தர வேறு யாரும் இல்லை ..
காரணம் அவர்களுக்கு தெரியும்
பிரயோஜனம் இல்லை ..எனவும்
நம்பர் தெரியாது எனவும் ..
அன்று எனது வீடு,
நண்பர்கள் என பலபேரை அழைத்து பேசி
அவர்கள் இல்லை என முடிவு செய்தேன் ...

அதே போல நான்
இங்கிருந்து உன்னை அழைத்தாலும்
இதே கதி தான் உனக்கும் ..
எனது நம்பர் தெரியாது ...
எனவே என்னோடு ( தேவை எனில் )

பேச வேண்டும் என்றால் அழைக்கலாம் ...
வேறு வழி இல்லை ...சரியா ...
( இல்லை என்றால் குறுந்தகவல் தான் ( SMS) செய்ய வேண்டும்....
ரெம்ப .....Costly Friend மொனங்கறது என் காதுக்கு கேட்கிறது )

என்னடா இவ்வளவு சீரியஸ் ஆக
இப்படி ஒரு கடிதம் என பார்க்கிறாயா ..
என்ன செய்ய ..
உனக்கு எனது கைபேசி எண்ணை கொடுத்தேன் ..

உலகத்தில் எவ்வளவோ
அதிசயங்கள் நடக்கின்றன ..
அது போல உனக்கு ஒரு
மிஸ் கால் பண்ண வேண்டும் என தோன்றி விட்டாலோ ..
அதான் முன் எச்சரிக்கையாக
இந்த மடல் ..இப்போது புரிந்ததா ???..

அதிகம் எழுதிவிட்டேன் ...கை வலிக்கிறது ...
உனது பதில் ( ரெண்டு வரி அல்ல ..விரிவான ) வரும் என்ற

நம்பிக்கையில்
நாட்களை
நகர்த்தும் ....

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...

என்ன படிச்சிடிங்களா ....
இந்த photogallery , cine gallery ..மேட்டர் என்னன்னா...அத தாங்க
அந்த முதல் கடிதத்தில் சொல்லி இருந்தேனே
அந்த சைட்லே
அவங்க தன் சுய தகவல் பகுதியில் ( Profile)
சொல்லி இருந்தாங்க வேலை என்ற இடத்தில்...
சுட்டுட்டம்ல அதை ..
கொஞ்ச நாள் பொறுத்து பதில் வந்திச்சுங்க ..
நீண்ட பதில் ..
அந்த கடிதத்தோடு அடுத்த பதிவில்
சந்திக்கிறேனே உங்களை ...
நீங்க யோசிக்கிறது எனக்கு தெரியுது ...
என்னடா ..இவன்...
இவன் எழுதிய கடிதம் மட்டுமே பதிகிறான் எனத்தானே ...
அடுத்த பதிவு அந்த தோழியின் கடிதமே ..
அதை படித்தால்
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் ..
எதை என கேட்காதீர்கள் ..
அடுத்த கடிதத்தை படியுங்கள்
அப்போது தெரியும் ..
மீண்டும் சந்திப்போம்...

அன்புடன்
விஷ்ணு

தொண்டு கட்டை ...




அன்புள்ள நண்பர்களே ...


எனது முதல் கடிதத்தில்
நான் சொல்லி இருந்தேன் ...
பெண்களுக்கு கடிதம் எழுதுவதில்லை
காரணம் சொல்கிறேன் என ..

நான் படித்தது ..
ஒரு சிறு கிராமத்தில் ...
ஒரு சிறிய பள்ளியில் ...

எனது தொடக்க கல்வி
அப்படி தான் ..தொடங்கியது ...
நினைத்தால் இப்பவும் சிரிப்பு வரும் ..
அந்த பள்ளி ஒரு தனியார் பள்ளி ..
அங்கு ஆசிரியர்களாக ஒரே குடும்பத்தை சேர்த்தவர்கள் ...
அங்கு நானும் எனது நண்பர்களும்
செய்யாத குறும்புகளே இல்லை எனலாம் ...

அப்பள்ளியில் ஒரு வரவேற்பறை ...
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது ...
அந்த வரவேற்பறையில்....
நீங்கள்.. கேள்வி பட்டிருப்பீர்களா என தெரியவில்லை ...

தொண்டு கட்டை ...
இப்படித்தான் அழைப்போம் அதனை ..
ஒரு மூலையில் அடுக்கிவைக்க பட்டிருக்கும் ..
அந்த பள்ளியில் நான்
நான்காம் வகுப்பு வரை படித்தேன் ..

ஒரு கட்டையில் ..
சாதாரணமாக அம்மி கல்லில் உள்ள அம்மி போல
ஒரு உருண்ட கட்டை.. அதில் ஒரு சங்கிலியும்
அதனோடு சேர்த்து ஒரு வளையம் பூட்டு...
இத்தியாதி ..சாதனங்கள் சேர்ந்தது தான் தொண்டு கட்டை ...

அந்த தொண்டு கட்டை எதற்கு தெரியுமா ?...
மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களை பயப்படுத்தவும்
நான்காம் வகுப்பு முதல்
தேவை என்றால் (குறும்பு அதிகமானால்)
அதை காலில் மாட்டி ..பூட்டி விடுவார்கள் ..

எங்கு வெளியில் சென்றாலும்
அந்த கட்டையை கையில் எடுத்துக்கொண்டு தான்
செல்ல வேண்டும் ..
வெளியில் நடக்கும்போது
எல்லா பசங்களும் கிண்டலும் செய்வார்கள்
தொண்டு கட்டை என ..கூவி ...

கட்டை மாட்டிக்கொண்டு
வீட்டுக்கு போனால் அங்கும் அடி ...
ரெம்ப கொடுமையான தண்டனை அது .
வீதி முழுவதும் தூக்கிக்கொண்டு ...
உறங்கும்போதும் கூடவே ...
நினைக்கவே பயமாக இருக்கு ..
இதில் சக மாணவர்களின் கிண்டல் ..
கட்டை போட காரணம் ..
வீதிகள் வருவோர் போவோர் எல்லாம் கேட்பார்கள் ..
பதில் சொல்ல வேண்டும் ..
அதும் உறவினர்கள் என்றால்
அவர்கள் பங்குக்கு
காரணம் தெரிந்த பின்
வீதியிலேயே ...ரெண்டு அடி தருவார்கள் ...

இது இந்த பள்ளியில் அதிக பட்ச தண்டனை ...
எத்தனை நாட்களுக்கு இப்படி நடக்கவேண்டும்
என்பதை தலைமை ஆசிரியர் தான் தீர்மானிப்பார்..

இனி விசயத்திற்கு வருகிறேன் ...
நான் நான்காம் வகுப்பு படித்தபோது ..
எனது நெருங்கிய தோழர்கள்
ஆறுமுகம் , மயில்சாமி , அர்ஜுனன், குமார் ..

இதில் ஆறுமுகம் கொஞ்சம் குறும்பு அதிகம் ..
அப்பவே அதிக சினிமா பார்த்தவன் எங்களில் ..
அன்று வழக்கம்போல் காலையில்
நாங்கள் அனைவரும் பள்ளியில் ஆஜர்,..
அப்போது வகுப்பில்
மஞ்சுளா டீச்சர் ..

ரெம்ப நல்லவங்க ...
நல்லா பாடம் எல்லாம் சொல்லி தருவாங்க ...
பிரேயர் முடிந்து வகுப்பு தொடங்கி விட்டது ...
ஆறுமுகம் மும்முரமாக
ஏதோ எழுதிக்கொண்டு இருந்தான் ..
அதும் மீண்டும் மீண்டும் திருத்தி...
பாடத்தில் கவனமாக இருந்ததால்
அவன் என்ன எழுதுகிறான் என்று
நான் கவனிக்கவில்லை ..
காரணம் எனக்கு பிடித்த பாடம் ....

கொஞ்ச நேரத்தில் ..
இண்டெர்வல் விட்டார்கள்..
சரி என நாங்கள் மூன்று பேர் வெளியில் போனோம் ..
ஆறுவை காணவில்லை ...
எங்கே போனான் என தேடியும் கிடைக்கவில்லை ..

பள்ளியில் கழிவறை எல்லாம் கிடையாது ..
கொஞ்சம் தள்ளி ஒரு சின்ன மைதானம் வரை
நடந்து போக வேண்டும் ..
எல்லாம் முடிந்து திரும்பி வந்தால் ..
அங்கு வகுப்பில் ஒரே களோபரம் ...

ஆறுவை தலைமை ஆசிரியர்
அடித்துக்கொண்டு இருந்தார் ..
பக்கத்தில் போக பயம்...
வேறு வழி இல்லாமல் பக்கத்தில் போனபோது
எங்களுக்கும் கொஞ்சம் அடி கிடைத்தது ...

விஷயம் தெரியாமல் அடி வாங்கினேன் ...
தொண்டு கட்டை எடுக்கப்பட்டது ..
அன்று ஆறுமுகம் அழுதது
இன்றும் எனக்கு மிக நன்றாக நினைவு இருக்கிறது ...

பாவம் அவன் ...
வகுப்பில் ராஜி என ஒரு வகுப்பு தோழி
அவளுக்கு கடிதம் கொடுத்திருக்கிறான் ..
கடிதம் என்றால்..
சின்ன துண்டு பேப்பருலே
உன்னை பிடிச்சிருக்கு
என்று எழுதி கொடுத்திருக்கிறான் ...
அதை அவள்
மஞ்சுளா டீச்சருக்கு கை மாற
விஷயம் தலைமை ஆசிரியர் வரை போய்
தொண்டு கட்டை போடும் நிலைமைக்கு வந்து விட்டது ...

மூன்று நாட்கள் ரெம்ப கஷ்டப்பட்டான் ..
சில நேரம் நானும் மயிலும்( மயில் சாமி)
மாறி மாறி கட்டையை தூக்கி கொள்வோம்
அவன் பக்கத்தில் நடந்து வருவான்

ஆனால் அவன் ரெம்ப நல்லவன் ..
இதில் ..அவன் ஒரு உண்மையை மறைத்து
என்னை காப்பாற்றி விட்டான் ...
காரணம் ..லெட்டர் கொடு என
ஐடியா கொடுத்ததே நான் தான் ...
அவன் மட்டும் அன்று
நான் தான் லெட்டர் கொடுக்க சொன்னேன் என
சொல்லி இருந்தால்....
அன்று எனக்கும் தொண்டு கட்டை தான் ...

இந்த நிகழ்ச்சி மாறாத வடு போல
மனதில் பதிந்து விட்டது ..
நான் பள்ளிகள் பல மாறியும் ..
கல்லூரி படிப்பிலும்
கடிதம் கொடுக்கும் எண்ணம்
என் மனதில் உதிக்கவே இல்லை
என்பது தான் உண்மை ..
இவ்வளவு மனதில் உறுதியாக இருந்தேன்..

வருடங்கள்..பல கடந்து ..
வேலை பார்க்க தொடங்கி
கடந்த வருடம் தான்
நான் முதல் முதலாக
நான் சொன்னேனே ...
அந்த தோழிக்கு கடிதம் எழுதினேன் ..
அது நீங்கள் முன் படித்தீர்கள் தானே ..

நேரம் கிடைக்கையில் நாங்கள் அனைவரும் சேர்ந்து
ராஜியை பலிவாங்கிய நிகழ்வை சொல்கிறேன் ...
அடுத்த கடிதமும் எழுதவேண்டும்

மீண்டும் சந்திப்போம் நண்பர்களே ..

அன்புடன்
விஷ்ணு ...

என் இனிய கவிதை தோழியே ...

ரெண்டு நாளு லீவ் ....
அதான் ...நேரம் போகல ...
ஒரு கடிதம் போட்டாச்சு ...
வேற ஏதாவது ..செய்யனுமே ....
விளைவு ... பாருங்கள்.....

அன்புடன்
விஷ்ணு ...


Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket



Photobucket

Photobucket

கலையாத மௌனம் ...



காலையில் கண் விழித்தபோதே ..
மனதில் ஏதோ ஒரு ...தனி உணர்வு ..
எப்படி என சொல்வது தெரியவில்லை ...
அதோ !!!....என்ன ஆச்சர்யம் ..
எனக்கு பதில் வந்துவிட்டது ...
ரெம்ப மகிழ்ச்சியாகி விட்டது ...
வந்த மடலில் பெரிதாக எதுவும் இல்லை ...

அவளைப்பற்றி இரண்டு வரி ......
என்னை பற்றி அதிக கேள்விகள் ...
உண்மையான பெயர் ...எந்த ஊர் ....எனது கைபேசி எண் எது ....
என கேட்டு அழகாக ஆங்கிலத்தில் எழுதி இருந்தாள்..

மீண்டும் பதில் எழுதினேன் ...

என்றும்
இனிய தோழிக்கு
நலம் நலமா?...
உன்னை எப்படி அழைப்பது ?..
நீ ?... நீங்கள் ?...
எனக்கு தெரியவில்லை...
ஒரு வேளை நீ
என்னை விட முதியவளாய் ..
நல்ல குடும்ப தலைவியாக ..
சிறந்த தாயாக.... இல்லை
ஏதாவது ஒரு அதிஷ்டசாலிக்கு..
அழகான காதலியாக....
எனக்கு தெரியவில்லை ...

என்ன வேலை ?.....எங்கு வேலை ?...
எவரெல்லாம் வீட்டில் ?....
என்னவெல்லாம் உன் ஆசைகள் ?..
என ஏராளமான கேள்விகள்
எனக்குள் ....

நீ தானே பதில் எல்லாம்
எனது கற்பனைக்கே விட்டு விட்டு
வேடிக்கை பார்க்கிறாயே ...
ஆனால் ஒன்று மட்டும் உறுதி ..
மென்மையானவள் மனதில் ...
அதனால் தானே ...


உன் கவிதைகள் அனைத்தும்
தாலாட்டையே உறங்க வைக்கும்
தனிப்பாட்டாய் நிற்கிறது ..

உன் தொலைபேசி எண்ணை
தெரிவிப்பாய் என நினைத்தேன்...
அதற்கும் மௌனம்...

என் மீது நம்பிக்கை வரும்போது
உன் மௌனம் கலையலாம்...


மௌனம் தான் கலையாமல் பேசுவது எப்படி ?..


அதிகம் எழுதிவிட்டேன் ...
அடுத்து உனது பதில் கண்டு ...


அன்புடன்
என்றும் இனிய தோழன்
விஷ்ணு ..


அவளைப்பற்றி ..எதுவுமே சொல்லாமல்...
என்னை பற்றி அதிகம் கேட்டதில்...
ரெம்ப பயப்படுகிறாள் என்று மட்டும் தெரிந்தது ...
சரி பார்ப்போம் இதற்கு என்ன பதில் வருகிறது என ..
அனுப்பிவிட்டேன்...இந்த மடலை ...
என்ன பார்த்தீங்களே ....என்னோடு கடிதத்தை ...

இதுக்கு மேல சாப்டா ..எப்படிங்க லெட்டர் எழுதறது.....