A for Apple...‏


நண்பர்களே ..வணக்கம் ...
நமது தலை அதாங்க.....
உருப்புடாதது_அணிமா
அவர்கள் ஆசைப்படி
( ஆசை எல்லாம் கிடையாது ..மாட்டி விட்டிட்டாருங்கோ ..தொடர் பதிவு )

A for apple ... வலை தளங்கள் சொல்லணும் ...
A B C .. வச்சு கவிதை எழுத்து டா.. அப்படின்னா ...

Asin அழகா இருக்காக ..
Chitra ஸாப்டா இருக்காக ..ன்னு
ஏதாவது பிட்ட போடலாம் ...
இது Site எல்லாம் சொல்லனுமே ...
ப்பா ...கண்ண கட்டுதே ...

ஏதோ எனக்கு தெரிஞ்ச கொஞ்ச Site
எல்லாம் சொல்லி இருக்கேன் ..
பார்த்திட்டு சொல்லுங்கோ ...
நண்பர்களே ...

A - http://www.ask.com/
இத பத்தி பெரிசா சொல்ல வேண்டியதில்லை ..
உங்களுக்கே தெரிந்திருக்கும்...எனக்கு
தெரியாது என எப்பவும் சொல்லாத தளம் ..

B -http://books.google.com/
கூகிள் தரும் பயனுள்ள தளம் ...புத்தக தேடல்களுக்கு

C - www.coolhunting.com/
கலை , வடிவமைப்பு , புதினங்கள் அனைத்தும் இங்கு பார்க்கலாம்
தினசரி இங்கு தகவல்கள் புதுப்பிக்க படுகிறது ..

D - www.dhg.org.uk/
மருத்துவ பகுதி ..இதயம் பற்றிய அனைத்து
தகவல்களுக்கும் உதவிகளுக்கும் இங்கு ..

E - www.ebay.com/
அப்பா அம்மா ..வேண்டும் என்றால் கிடைக்காது
அது தவிர அனைத்தையும் வாங்கலாம் ஆன்லைனில் ..இங்கே ..
இல்லை என்று சொல்ல மாட்டார்கள் ...

F - www.finalsense.com/
நல்ல வலை தளம் .. ப்ளாக்கர் வலை தளங்களுக்கு
நல்ல டேம்பிளேட்ஸ் இங்கு கிடைக்கும் இலவசமாக

G - girgit.chitthajagat.in/
மொழி தெரியாத வலை தளங்களில் சிக்கி
கண்ணை கட்டி விட்டதுபோல இருக்கிறதா ..
கவலை வேண்டாம் இங்கு செல்லுங்கள் ..
முடிந்தவரை நமக்கு தேவையான மொழியில்
மொழிபெயர்த்து தருவார்கள் ..
எனக்கு பிடித்த தளங்களில் இதுவும் ஒன்று ..

H - www.hi5.com/
ஓர்குட் போல நண்பர்கள் வட்டாரம் இதுவும் ...

I - www.incredibleindia.org/
இந்தியா பற்றிய அனைத்து பயண தகவல்களுக்கும்
மற்றும் காணவேண்டிய சுற்றுலா இடங்கள்
அனைத்தும் விரிவாக இங்கு காணலாம்

J -http://www.jeevansathi.com/
திருமண செய்ய காத்திருப்பவர்கள் இங்கு ஏராளம் ..
ரெஜிஸ்டர் பண்ணவில்லை என்றாலும்
(அட்ரஸ் எப்படியாவது கண்டுபிடிச்சு)
மெயில்லே பின்னாடியே வருவாங்க இவங்க ..

K - http://www.keralatourism.org/
கேரளா எனக்கு ரெம்ப பிடிக்கும் ...நல்ல சுற்றுலா இடம் ..
நிறைய இயற்கை காட்சிகள் அங்கு பார்க்கலாம் ..
அதை பற்றி தெரிந்துகொள்ள ...இங்கு போகலாம் ..

L - www.livevideo.com/
நிறையவே பார்க்கலாம் ...நேரம் கடத்தலாம் இங்கு ..

M - http://musicmazaa.com/tamil/
நல்ல பாடல்கள் ..இங்கு கிடைக்கும் .
நேரம் போவது தெரியாது ...
நல்ல வலை தளம் எனக்கு பிடித்தவைகளில் இதுவும் ஒன்று ...

N - www.nokia.com/
மொபைல்னா ...கொஞ்சம் வீக்னஸ் எனக்கு ...ஹி ஹி

O- http://www.orkut.com/
நண்பர்கள் வட்டாரம் இதுவும் ...
மொபைல் மாதிரி ...இதுவும் எனக்கு ...ஹி ஹி ..

P - http://picasa.google.com/
உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் ..
புகை படங்களுக்கு தேவையான அனைத்தும் இங்கே
கூகுளின் மற்றொரு சேவை ...

Q - quillpad.in/tamil/
தமிழில் தட்டச்சு செய்ய கூகிள் வரும் வரை
நான் இதை மட்டுமே நம்பி இருந்தேன் ..

R - www.raaga.com/
மீண்டும் ஒரு நல்ல வலைத்தளம் பாடல்களுக்கு ..
எனக்கு பிடித்தவைகளில்...
(என்ன செய்ய... பாட்டு நமக்கு உயிர் நாடி ..)

S- www.sxc.hu/
எனக்கு மிகவும் பிடித்த வலை தளம் ...
புகை படங்களோடு விருப்பம் உள்ளவர் ..
கண்டிப்பாக போகவேண்டிய தளம் ..
எல்லா தலைப்புகளிலும் ஏராளமான புகைப்படங்கள் ..இங்கு ..

T - http://www.tutorialized.com/
போட்டோ ஷாப் படிப்பவர்களுக்கு
உதவியாக இருக்கும் வலை தளங்களில் இதுவும் ஒன்று ...

U- www.usertube.com/
நேரம் போக இங்கும் போகலாம் ...

V- www.vijaynet.com/
விஜய் என்றால் எனக்கு கொஞ்சம் பிடிக்கும்..
அவரை பற்றி இங்கு...

W - http://www.webshots.com/
இந்த வலை தளம் நல்ல வலை தளம் ...
புகை படங்கள்...சேமிக்க ..அனைத்திற்கும்...
எனக்கு உதவியாக இருக்கு ..

X - www.xe.com/
தினசரி நிலவரம் ..கரன்சி ...

Y- http://www.youtube.com/
அறிமுகம் தேவை இல்லாத தளம்

Z - http://www.ziddu.com/
புகை படங்கள்...சேமிக்க ..மீண்டும் ஒரு தளம் ...

ம்ம் ஒரு வழியா ... முடிச்சிட்டேன் ...
இனி நான் மூன்று பேரை கொக்கி போடணும் ...

ஒண்ணு ..நம்ம தோழி இனியவள் அவர்கள் ..
ரெண்டு நம்ப அண்ணன் குட்டிபிசாசு அவர்கள்
மூணு நம்ப நண்பர் திகழ்மிளிர் அவர்களையும்
அன்புடன் அழைக்கிறேன் ..

Rule:
1. The Tag name is A for Apple
2. Give preference for regular sites
3. Ignore your own blogs, sites.
4. Tag 3 People

இரண்டாவது கடிதம் ....


முதல் கடிதம் போட்டு
பதில் வராத சோகம் மனதில் ...
நாட்கள் நான்கைந்து முடிந்தது ..
இனியும் பதில் வரவில்லை ..
என்ன செய்வது என தெரியவில்லை ..

மனதில் சிறிதாக ஒரு நெருடல்...
தேவை இல்லாமல்..
மடல் எழுதி நமது மரியாதையை
நாமே கெடுத்துகொண்டோமா என ..
இந்த சிந்தனையில் இரண்டு நாட்கள் கடந்தன ...

அடுத்தநாள் ஒரு மடல் கூட
எழுதினால் என்ன என
மீண்டும் மீண்டும் தோன்ற ..
சரி எழுதிவிடலாம் என முடிவு செய்து விட்டேன் ..

ஆனால்..உள்மனம் சொன்னது ..
டேய் ...நீ மீண்டும் பெரிய மடல் எல்லாம் போட்டு வழியாதே ...
வேண்டுமென்றால் சின்னதாக
ஒரு ரெண்டு வரி மட்டும் எழுது ..என ...
அப்படியே எழுதலாம் என முடிவு செய்து
அடுத்த கடிதம் எழுதினேன் ...

என் இனிய தோழியே ...
உன் மடல் வராததால்
உன்மீது அதிக கோபமாக இருந்தேன் .
மன்னிக்க வேண்டுகிறேன் ..
எனக்கு தெரியாது ..
நீ மடல் எழுத நினைத்தபோது
மசி தீர்ந்த கதை ..

அன்புடன்
புரியாத புதிராய்
உன் இனிய நண்பன்
விஷ்ணு ...

இது தாங்க நான்
இரண்டாவதாக அந்த தோழிக்கு எழுதிய மடல் ...
இதுக்கு பதில் வரலைன்னா
இனி கடிதம் போடுவதில்லை என முடிவு செய்து
இதை அனுப்பி விட்டேன் ..
பதில் வந்தது ..
எப்படி இருந்தது பதில் என
அடுத்த பகுதியில் சொல்கிறேன் ..
இப்போ உறக்கம் வருகிறது ..
நாளை ஆபீஸ் போகவேண்டும் ...
அடுத்த கடிதத்தில்
அனைவரையும் சந்திக்கிறேனே ...

அன்புடன் ...
விஷ்ணு ...

முதல் கடிதம் ...


எனது இனிய தோழிக்கு ..
உன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கிறது
தினமும் காண வேண்டும் என நினைக்கிறேன்..
என்ன சக்தி அதற்கு என தெரியவில்லை
ஆனால் உன் கவிதைகளால் உன் மென்மையை ....
புரிந்துகொள்ள முடிகிறது ....
என்னை பற்றி சொல்ல நிறையவே இருக்கிறது
கேட்பதற்கு மனம் இருக்கிறதா என தெரியவில்லை
வாழ்த்து அனுப்பி இருந்தேன்....
வந்ததா என தெரியவில்லை ...
நீயும் பார்க்கவில்லை என நினைக்கின்றேன் ,..

இறைவனுக்கு எத்தனையோ பக்தர்கள்
அர்ச்சனை செய்கிறார்கள் ...எல்லாவற்றையுமா
இறைவன் ஏற்றுக்கொள்ள முடியும் ?...நிறுத்துகிறேன்...
பதில் அனுப்புவாய் என்ற நம்பிக்கை எனக்கில்லை ....
நான் வானத்தில் நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டு இருப்பவன் ...
காரணம் நம்பிக்கை... எண்ணி முடித்து விடலாம் என்று ...
அதுபோல என்னவோ ஒரு நம்பிக்கை ...
நீ பதில் அனுப்புவாய் என்று ...

ஒருவேளை என்னால் நட்சத்திரங்களை
எண்ண முடியாமல் போகலாம் ஆனால்
எனது நம்பிக்கையை நான் விட மாட்டேன் ,..
மீண்டும் மீண்டும் எதிர்பார்ப்பேன்
எண்ணி விடலாம் என ..
ஏன் நீ பதில் அனுப்புவாய் என்று கூட ,..

நட்பு என்ற தொடர்கதைக்கு
தொடக்க உரை மட்டுமே எழுதி உள்ளேன்,..
முடிவுரை ஆக்காமல்
அடுத்த அத்தியாயத்தை
எழுதுவாய் என எதிர் பார்க்கவில்லை...
முடிந்தால் முயற்சி செய்ய வேண்டுகிறேன் ,..

இப்படிக்கு
உனது கவிதைத்தோழன் என்பதா...
இல்லை உனது தோழன் என்பதா...
இல்லை உனது கவிதை என்பதா...
தெரியவில்லை ..
இப்பவும்
கானல் நீரில் ஈரத்தை
தேடிக்கொண்டிருக்கும்...
விஷ்ணு ...

என்ன பாக்கறீங்க ..
இது தான் எனது முதல் கடிதம் ..
நான் முதல் முதலாக நேரில் பார்க்காத...
சில கவிதைகள் மட்டுமே அவளைப்பற்றி தெரிந்த
ஒரு தோழிக்கு நான் எழுதிய முதல் கடிதம் ...

அவளைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் ..
நிறையவே சொல்லலாம் ..நல்ல பெண் ..
மிக நன்றாக கவிதை எழுதுவாள் ..
அவள் பெயர் ..தெரியாது ..எந்த ஊர்.. அதுவும் தெரியாது..

ஒரு வலைதளத்தில் அவளை எனக்கு அறிமுகம் ..
தினமும் அங்கு நான் ஏதாவது எழுதிக்கொண்டு இருப்பேன் கவிதை ..துணுக்குகள் என ..
நான் கவிதை எழுதும் அதே நேரத்திற்கு வருவாள்...
நான் எழுதும் கவிதைக்கு மறு கவிதை போல
எழுதி விட்டு போவாள் ..

இந்த அறிமுகத்தை வைத்து
கடிதம் எழுதி அனுப்பி விட்டேன்
அவள் மின்னஞ்சல் முகவரிக்கு ...
அந்த வலை தளத்தில் உறுப்பினர் பகுதியில்
முகவரி இருக்கும் ....
பதில் வந்ததா ..என்னாச்சு என அடுத்த பகுதியில் சொல்கிறேன் ...
(முதல்ல ஒரு மின்னஞ்சல் வாழ்த்து ...123 greetings...லே பதில் ஒன்னும் வரல ..அந்த வாழ்த்து அவள் பார்க்கவும் இல்லை ..சும்மா இருந்தர முடியுமா ..அதான் அடுத்த லெட்டர் ...அதத்தாங்க நீங்க படிச்சீங்க இப்போ ...)


உங்களுக்கு ஒன்று தெரியுமா ..
நான் பெண்களுக்கு கடிதம் எழுதுவதில்லை என மனதில் உறுதியாக இருந்தவன் ..காரணம்..இருக்கு ...

அது ஒரு பழங்கதை கதை...
அடுத்த அத்தியாத்தில் அதை பற்றியும் எழுதுகிறேன் ...
அன்புடன் ...
விஷ்ணு ...