Showing posts with label நழுவிய அழைப்பு ...கடிதம் ..By... விஷ்ணு. Show all posts
Showing posts with label நழுவிய அழைப்பு ...கடிதம் ..By... விஷ்ணு. Show all posts

நழுவிய அழைப்பு ...


நழுவிய அழைப்பு ...( Missed Call )

இனிய நண்பர்களே ...
வணக்கம் ...
மீண்டும் ..
எனது அடுத்த கடிதம்
உங்கள் விழிகள் தழுவ ...

கடந்த எனது கடிதத்தில்
எனது கைபேசி எண்ணை
அந்த தோழிக்கு கொடுத்திருந்தேன்
என்று தெரியும் தானே உங்களுக்கு ..

திடீர் என்று ஒரு வெள்ளிக்கிழமை
காலையில் எனது கைபேசி சிணுங்க
அந்த அழைப்பை
நான் தழுவும் முன் அது நழுவி விட்டது ( Missed)
எனக்கோ மிக ஆச்சரியமாக போய் விட்டது ..
மண்டையை உடைத்துகொள்ளாதது தான் பாக்கி..
காரணம் இருக்குங்கோ ...
வெளி நாடுகளில் இருந்து
கைபேசிக்கு அழைப்பு வந்தால்
குவைத்தில் அழைப்பவர் எண் தெரியாது ....
கைபேசியில் இருந்து அழைத்தாலும் ..
இதே கதி தான்
பைத்தியம் பிடிக்கிற மாதிரி .. 00 110 ..இந்த மாதிரி ..
ஏதாவது புரியாத எண்கள் வரும்
அதே எண்ணுக்கு நாம் அழைத்தாலும்
தொடர்பு கிடைக்காது ...

நீங்களே சொல்லுங்க ..
எனக்கு பைத்தியம் பிடிக்காம இருக்குமா ?..
எனக்கு யாருமே நழுவும் அழைப்பை (Miss call)
பண்ண மாட்டாங்க ..
செய்ய கூடாதுன்னு சொல்லியே வச்சிருக்கேன் ..
அப்படி இருக்க ..எப்படிங்க ?..
நான் எண் கைபேசி எண்ணை
யாருக்குமே கொடுப்பது கிடையாது ..
இவங்களுக்கு தான் சமீபத்தில் கொடுத்திருக்கிறேன் ..
அதாங்க ஒரு மடல் போட காரணம் ..
( ஏன்டா உனக்கு லெட்டர் போட வேற விசயமே கிடைக்கலையானு நீங்க திட்டக்கூடாது ..நான் என்ன செய்ய )
முடிவு பண்ணிட்டேன் ....
அவங்களுக்கு ஒரு மடல் போடலாம் என ...
அதாங்க இந்த லெட்டர் ..
படிச்சிட்டு வாங்க
காத்திருக்கிறேன் ..


என்
இனிய தோழிக்கு
நலம் ..நலமா ?..
என்ன செய்து கொண்டு இருக்கிறாய் ?..
உன் பதில் வரும் என்ற உறுதியில்
இதோ இன்றும் தொடங்கிவிட்டேன்
உனக்கு மடல் எழுதவே ...

வீட்டில் அனைவரையும் கேட்டதாக கூறவும்...
யார் யார் வீட்டில் என நீ விரிவாக எழுதிய மடல் கிடைத்தது ..
( மடல் வந்துச்சு ஆனா... வீட்ல யாரு யாரு இருக்காங்க ...அப்படின்னு எதுவும் அதுல இல்லை ..அத எப்படி அவங்க கிட்ட சொல்லறதுன்னு தெரியல .)

இப்பவும் photo gallery ...cine gallery என
வழக்கம்போல்
செய்ததையே செய்து கொண்டு
இருப்பாய் என நினைக்கிறேன் என்னைப்போல ...
என்ன புரியவில்லையா ?..
உனக்கு மறக்காமல்
தினம் ஒரு கடிதம் என எழுதுகிறேனே ..அது போல ..
எனது வேலை நன்றாகவே நடக்கிறது ...

உன்னிடம் முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும்
தயவு செய்து கடந்த வெள்ளி அன்று செய்தது போல
நழுவும் அழைப்பை எனது கைபேசிக்கு ( Mobile) செய்யாதே ..

காரணம் இங்கு குவைத்தில்...
எங்கிருந்து கால் வந்தாலும்
இன்காமிங் நம்பர் தெரியாது ..
குவைத்தில் எல்லா
தொலைபேசி சேவைகளும் ( நெட்வொர்க்)
அப்படி தான் ..

வெள்ளியன்று உனது அழைப்பு என ..
தெரியாமல்....
நீ தான் ..
ஏனென்றால் எனக்கு
நழுவும் அழைப்பு தர வேறு யாரும் இல்லை ..
காரணம் அவர்களுக்கு தெரியும்
பிரயோஜனம் இல்லை ..எனவும்
நம்பர் தெரியாது எனவும் ..
அன்று எனது வீடு,
நண்பர்கள் என பலபேரை அழைத்து பேசி
அவர்கள் இல்லை என முடிவு செய்தேன் ...

அதே போல நான்
இங்கிருந்து உன்னை அழைத்தாலும்
இதே கதி தான் உனக்கும் ..
எனது நம்பர் தெரியாது ...
எனவே என்னோடு ( தேவை எனில் )

பேச வேண்டும் என்றால் அழைக்கலாம் ...
வேறு வழி இல்லை ...சரியா ...
( இல்லை என்றால் குறுந்தகவல் தான் ( SMS) செய்ய வேண்டும்....
ரெம்ப .....Costly Friend மொனங்கறது என் காதுக்கு கேட்கிறது )

என்னடா இவ்வளவு சீரியஸ் ஆக
இப்படி ஒரு கடிதம் என பார்க்கிறாயா ..
என்ன செய்ய ..
உனக்கு எனது கைபேசி எண்ணை கொடுத்தேன் ..

உலகத்தில் எவ்வளவோ
அதிசயங்கள் நடக்கின்றன ..
அது போல உனக்கு ஒரு
மிஸ் கால் பண்ண வேண்டும் என தோன்றி விட்டாலோ ..
அதான் முன் எச்சரிக்கையாக
இந்த மடல் ..இப்போது புரிந்ததா ???..

அதிகம் எழுதிவிட்டேன் ...கை வலிக்கிறது ...
உனது பதில் ( ரெண்டு வரி அல்ல ..விரிவான ) வரும் என்ற

நம்பிக்கையில்
நாட்களை
நகர்த்தும் ....

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...

என்ன படிச்சிடிங்களா ....
இந்த photogallery , cine gallery ..மேட்டர் என்னன்னா...அத தாங்க
அந்த முதல் கடிதத்தில் சொல்லி இருந்தேனே
அந்த சைட்லே
அவங்க தன் சுய தகவல் பகுதியில் ( Profile)
சொல்லி இருந்தாங்க வேலை என்ற இடத்தில்...
சுட்டுட்டம்ல அதை ..
கொஞ்ச நாள் பொறுத்து பதில் வந்திச்சுங்க ..
நீண்ட பதில் ..
அந்த கடிதத்தோடு அடுத்த பதிவில்
சந்திக்கிறேனே உங்களை ...
நீங்க யோசிக்கிறது எனக்கு தெரியுது ...
என்னடா ..இவன்...
இவன் எழுதிய கடிதம் மட்டுமே பதிகிறான் எனத்தானே ...
அடுத்த பதிவு அந்த தோழியின் கடிதமே ..
அதை படித்தால்
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் ..
எதை என கேட்காதீர்கள் ..
அடுத்த கடிதத்தை படியுங்கள்
அப்போது தெரியும் ..
மீண்டும் சந்திப்போம்...

அன்புடன்
விஷ்ணு